வீடொன்றை இடித்தழித்த மூவர் கைது

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

வீடொன்றை இடித்தழித்த மூவர் கைது

சாவகச்சேரி பகுதியில் காணி ஒன்றின் வேலிகளை உடைத்தது, காணிக்குள் அத்துமீறி நுழைந்து வீடொன்றை இடித்து அழித்த பெண் உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் வீட்டை இடித்தழிக்கப் பயன்படுத்திய கனரக வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றினர்.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காணி ஒன்றில் உள்ள ஆட்கள் அற்ற வீட்டைச் சுற்றி தூண்கள் நடப்பட்டு முட்கம்பி வேலி அடைக்கப்பட்டு இருந்தது.

அந்த காணிக்குள் நேற்று (12) ஞாயிற்றுக்கிழமை காலை கனரக வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி சென்ற பெண்ணொருவர் , வேலிகளை கனரக வாகனத்தால் பிடுங்கி விட்டு காணிக்குள் இருந்த வீட்டைத் தரைமட்டமாக்கும் செயலில் ஈடுபட்டார்.

அது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் , காணிக்குள் அத்துமீறி நுழைந்த பெண்ணை கைது செய்ததுடன், கனரக வாகனச் சாரதியையும் கைது செய்தனர்.

இரு தரப்பினருக்கு இடையிலான காணிப் பிரச்சினையே சம்பவத்துக்கு காரணம் என தமது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீடொன்றை இடித்தழித்த மூவர் கைது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)