
posted 1st March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள் இந்திய துணைத்தூதுவரை சந்தித்து கலந்துரையாடினர்.
நேற்று முன் தினம் திங்கள் (27) மதியம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் துணைதூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்த மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மகஜர் ஒன்றை வழங்கியதோடு, வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
குறிப்பாக இந்திய கடற்றொழிலாளர்களின் நாட்டுப் படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கவுள்ளதாக வெளிவந்த செய்திகள் தொடர்பில் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதுவருக்கு தெரிவித்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)