
posted 27th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மன்னாரில் இலவச அரிசி வழங்கும் திட்டம் ஆரம்பம்
2022/23 பெரும்போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பு அகற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அனுசரணையில் இலவச அரிசி வழங்கும் வைபவம் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டி மெல் அவர்களின் தலைமையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக அரிசி வழங்கும் முதலாம் கட்ட நிகழ்வு முருங்கன் சிறுகண்டல் கிராமத்தில் அமைந்துள்ள பலநோக்கு மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை (26) காலை 10.30 மணி அளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் நானாட்டான் பிரதேச செயலாளர் . மன்னார் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் அலியார் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)