
posted 9th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகம் ஏற்பாடு செய்த தமிழ் - முஸ்லிம் பெண் ஆளுமைகள் கௌரவிப்பும் விசேட மகளிர் தின கவியரங்கும் நடைபெற்றன.
கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல். ஜவ்பர்கான் தலைமையில், காத்தான்குடி கலாநிதி அலவி சரிபுத்தீன் முன்னோடிகள் பாடசாலை மண்டபத்தில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.
காத்தான்குடி நகர சபைச் செயலாளர் திருமிதி றிப்கா சபீன், காத்தான்குடியின் முதல் பெண் இலிகிதர் திருமதி பரீனா றூஹூல்லாஹ், காத்தான்குடியின் முதல் பெண் நூலகர் திருமதி ஹமீதா சுபைர், காத்தான்குடி பொது நூலக பிரதம நூலகர் திருமதி கமலினி புஸ்பராஜா ஆகியோர் இதற்போது நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரி எம்.எம்.ஹாரீஸ் மதனி, கழகத்தின் செயலாளர் கலாபூசணம் காத்தான்குடி பாத்திமா உட்பட பலர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)