
posted 16th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மகஜர் கையளிப்பு
உள்ளூர் இழுவைப் படகினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து அனலைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் யாழ். மாவட்ட செயலாளரிடம் மகஜரொன்றைக் கையளித்தனர்.
யாழ். மாவட்ட செயலகத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் சென்ற அனலைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜோன் பொஸ்கோ, செயலாளர் வே.வின்சன், ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச செயலாளர் அ.அன்னராசா ஆகியோர் யாழ். மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுநதரனை சந்தித்து மகஜரை கையளித்தனர்.
அந்த மகஜரில் குருநகர் பகுதியை சேர்ந்த உள்ளூர் இழுவைமடி தொழிலாளர்களால் உள்ளூர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)