
posted 29th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நெடுந்தீவு வெடியரசன் கோட்டை விவகாரத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம்
நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதன்கிழமை (29) போராட்டத்தில் ஈடுபட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அந்தக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதவராளர்கள், பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தையடுத்து அப்பகுதியில் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பெளத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையால் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் தொல்லியல் திணைக்களம், கடற்படையின் செயல்பாட்டை கண்டித்தும், வெடியரசன் கோட்டை தமிழரின் சொத்து என வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)