திரிபு படுத்தப்பட்டவற்றை நம்பாதீர்கள் - தவராசா கலையரசன்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

திரிபு படுத்தப்பட்டவற்றை நம்பாதீர்கள் - தவராசா கலையரசன்

முஸ்லிம்கள் தொடர்பில் மன்னாரில் தான் பேசியதை தேவையற்ற முறையில் வர்ணித்து ஒரு தரப்பு அவதூறு பரப்பி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் இடம்பெற்ற எமது கட்சிக் கூட்டத்தில் நான் முஸ்லிம்கள் குறித்து பேசியுள்ளதாக வர்ணித்து சில செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. சில தரப்பினர் இவ்விடயத்தை முன்னெடுப்பதை நான் அறிகின்றேன். இதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

நான் அவ்வாறு எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனை மறுக்கின்றேன். எமது கட்சியில் உள்ள உள்ளக விடயங்களை நாங்கள் கலந்துரையாடி இருந்தோம். அதன் அடிப்படையில் சில குற்றச் சாட்டுக்களை அங்கு தெரிவித்து கலந்துரையாடினோம். அத்துடன் இக்கூட்டத்துக்கு எந்த செய்தியாளர்களும் அனுமதிக்கப்படவில்லை.

மிகவும் பொய்யான விடயங்களை திட்டமிட்டு பிரசுரித்துள்ளனர். கல்முனை விடயத்தையும் இக்கூட்டத்தில் பேசினேன். இதர தமிழ், முஸ்லிம் கட்சி தொடர்பிலும் இக்கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் எமது கட்சித் தலைமையிடமும் பேசவுள்ளேன். வீணாக இவ்வாறு அவதூறு பரப்புவது ஏற்க முடியாதது. இவ்வாறு செய்தி வதந்திகளை பரப்புவது இரு தரப்பினரை குழப்புவதுடன் பிரச்னைகளையும் ஏற்படுத்த திட்டமிடப்படுகின்றது என்றார்.

திரிபு படுத்தப்பட்டவற்றை நம்பாதீர்கள் - தவராசா கலையரசன்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)