
posted 15th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எமது உரிமைகளைப் பாதுகாப்போம்' பயிற்சிப்பட்டறை
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எமது உரிமைகளைப் பாதுகாப்போம்' எனும் தலைப்பில் பயிற்சிபட்டறை இடம்பெற்றது.
இப் பயிற்சிபட்டறை திங்கட்கிழமை (15) வவுனியா நோர்த் வே ஹோட்டலில் காலை 9 மணித் தொடக்கம் மாலை 4 மணிவரை இடம்பெற்றது.
இவ் அமர்வில் பத்திரிகை ஸ்தாபனத்தின் ஆணைக் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு உபாலி அபேரத்ன, ஆணையாளர்களான சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தன, சட்டத்தரணி ஜகத் லியன ஆராச்சி மற்றும் எம். நஹியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் இந் நிகழ்வில் முல்லைத்தீவு , கிளிநொச்சி , வவுனியா மற்றும் மன்னார் ஊடகவியலாளர்கள் குறிப்பிடப்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் 40 பேர் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)