
posted 29th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சிவனின் திருக்கூத்தை உணரப்போகும் சமூகம்
வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமைக்கு சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நல்லூரில் போராட்டம் இடம்பெற்றது.
நேற்று (28) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் நல்லை ஆதீனம் முன்பாக சைவ அமைப்புகளின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் நடைபெற்றது.
- “தொல்லியல் திணைக்களமே தமிழர்களை தொலைக்காதே”
- “ஆதிசிவன் கோவில் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவது ஏன்?”
- “சிவனை அசைத்தவனே அவனின் திருக்கூத்தை விரைவில் உணருவாய்”
- “சிவன் சொத்தை தீண்டினால் குலமே நாசமாகும்”
போன்ற வாசகங்களை போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)