
posted 12th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சிறப்பாக நடந்தேறிய 'மெசிடோ' நிறுவன மகளிர் தின விழா
மன்னார் மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தினத்தை பலதரப்பட்டவர்களும் கொண்டாடிவரும் இவ்வேளையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) இம் மகளிர் தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடியது.
சனிக்கிழமை (11) மன்னார் நகரசபை மண்டபத்தில் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டார்.
அத்துடன் மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட அரச திணைக்கள பெண் அதிகாரிகள் , உத்தியோகத்தர்களுக்கு நினைவுச் சின்னமாக கேடயங்கள் வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இவ்விழாவில் மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள பெண்கள் கலந்து கொண்டதுடன் அவர்களால் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டிருந்தன.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)