
posted 13th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சாரதி உயிரிழப்பு
மட்டக்களப்பு - ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரத்தால் உழுது கொண்ட போது, உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் அதனைச் செலுத்திய சாரதி உயிரிழந்த சம்பவம், நேற்று முன் தினம் சனிக்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த 34 வயதுடைய தர்மதாசா சதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
உழும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, உழவு இயந்திரத்தின் பின்பக்க ரயர்கள் வயலில் புதைந்ததையடுத்து, உழவு இயந்திர முன்பகுதி மேல் எழுந்து தலைகீழக புரண்டுடதையடுத்து, அவர் கீழ் விழுந்ததில் கலப்பையில் தலை அடிபட்டு படுகாயமடைந்ததையடுத்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)