
posted 19th January 2022
பனை சார் உற்பத்தி பயிற்சிநெறியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் பனைசார் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி நிகழ்வும் நேற்று புதன்கிழமை காரைநகர் பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பனைசார் உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாக பனைசார் உற்பத்தி பயிற்சிநெறி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.அந்தப் பயிற்சிநெறியின் நிறைவில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
இதன்போது முதல் மூன்று இடங்களில் உள்ள உற்பத்தி பொருட்களை செய்த மூவர் கௌரவிக்கப்பட்டனர்.
காரைநகர் பிரதேச சபையின் செயலாளர் கி.விஜயேஸ்வரன் தலைமை தாங்கிய இந்த நிகழ்வில் பிரதேச சபையின் தவிசாளர் ம.அப்புத்துரை பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபையின் ஊழியர்கள், பனைசார் உற்பத்திப் பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House