
posted 27th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சம்மாந்துறையில் இலவச அரிசி விநியோகம்
அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுபவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 51 கிராம சேவகர் பிரிவிலுள்ள தகுதியான மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில நடைபெற்ற இந் நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஏ. டக்ளஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எச்.பீ. அனீஸ், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் ஆகியோர் உட்பட பிரதேச செயலக கணக்காளர் ஐ.எம். பாரீஸ், தலைமைப் பீட சமுர்த்தி முகாமையாளர் யூ.எல்.எம். சலீம், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எம்.எல்.எம். தாசிம், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம். ஷாபீர் வங்கி முகாமையாளர் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)