காற்றுச் சக்தி  செயற்திட்டத்திற்கு பொது மக்களின் எழுத்துமூல அபிப்பிராயம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மன்னார் தம்பவனி காற்றுச் சக்தி செயற்திட்டத்தின் முதலாம் கட்ட விரிவாக்கமாக கொள்ளளவை மேம்படுத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுவதால் இந்த உத்தேச செயற்திட்டத்தால் சுற்றாடலுக்கு ஏற்படும் தாக்கம் தொடர்பாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தலாம் என கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் ஆர்.ஏ.எஸ். ரணவிக்க தெரிவித்துள்ளார்.

1988 ஆம் ஆண்டின் 64 ஆம் இலக்க மற்றும் 2011 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க ஒழுங்குவிதிகளின் மூலம் திருத்தப்பட்ட 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ சட்டத்தின் 16 (1) ஆம் பிரிவின் நியதிகளுக்கு அமைவாக பத்தரமுல்ல , பெலவத்த , புதிய பாராளுமன்ற வீதி , இல.754 எனும் முகவரியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையினால் சமர்பிக்கப்படும் மன்னார் தம்பவனி காற்றுச் சக்தி செயற்திட்டத்தின் கொள்ளளவை விரிவுபடுத்தப்பட இருக்கின்றது.

இம் முதலாம் கட்ட விரிவாக்கல் செயற்திட்டத்திற்கு சமர்பிக்கப்பட்ட சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பொது மக்களின் பரிசீலனைக்காக நகர அபிவிருத்தி மற்றும் வீட்டு அமைச்சு , கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் மத்திய சுற்றாடல் அதிகார சபை . வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் , மாவட்ட செயலாளர் அலுவலகம் , பிரதேச செயலாளர் அலுவலகம் , மாநகர சபை பிரதேச செயலகம் கடற்தொழில் , நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியவற்றில் பொதுமக்களின் கருத்துக்களை 2023.02.22 ஆந் திகதி முதல் 30 நாட்களுக்குள் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு எழுத்து மூலமாக சமர்பிக்கும்படி வேண்டப்பட்டுள்ளனர்.

காற்றுச் சக்தி  செயற்திட்டத்திற்கு பொது மக்களின் எழுத்துமூல அபிப்பிராயம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)