
posted 1st March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவை சூட்சுமமாக கடத்திச் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரா நகர் வீதியில் வைத்து 51 வயதுடைய காரியப்பர் இப்ராஹீம் என்ற சந்தேக நபரே இவ்வாறு கைதானவராவார்.
அக்கரைப்பற்று இராணுவ முகாம் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய மல்வத்தை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் குறித்த சந்தேக நபர் கைதானார்.
கைதான சந்தேக நபர் வசம் இருந்து 5 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைக்காக அவர் நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)