இலங்கை வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் புதன்கிழமை (08) பிற்பகல் 12.30 மணியுடன் வங்கி ஊழியர்கள் அரை நாள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வங்கி ஊழியர்களின் சம்பளத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பை வெளியிடும் முகமாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் நேற்று அரைநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)