
posted 9th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி கனடா தேசத்தில் புலம்பெயர்ந்து வாழும் இப் பாடசாலையின் பழைய மாணவரும் முன்னாள் ஆசிரியருமான பொன். சுகுமார் ஐம்பதாயிரம் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இப் பண உதவியை ஆசிரிய ஆலோசகரும் பாண்டிருப்பு நாவலர் அறநெறிப் பாடசாலை அதிபருமான மா. லக்குணத்தின் மூலமாக இப் பாடசாலை அதிபர் க. தியாகராசாவிடம் கையளித்தார்.
இவை தவிர பல பாடசாலைகளுக்கும் அறநெறிப் பாடசாலைகளுக்கும் அவ்வப்போது பொன். சுகுமார் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)