அடுத்துமொரு சர்வதேசப் பரவல்

உலகானது அடுத்துமொரு சர்வதேசப் பரவல் நோயாக பறவைகள் - மனித காய்ச்சல் பரவலினால் பாதிக்கப்படலாமென உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவிக்கின்றது.

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் பின்பு உலகம் பூராகவும் உள்ள 80மில்லியன் பறவைகள் இவ் வைரஸினால் தாக்கப்பட்டிருக்கின்றன. இந்த வைரஸானது மனிதரைத் தாக்கி மீண்டுமொரு காய்ச்சல் பரவலை உண்டாகுமென்பது அருகி இருந்தாலும், வைரஸின் மரபணு மாற்றம் காரணமாக இவ்வைரஸுக்களின் பரவலானது பறவைகளிலிருந்து மனிதருக்கு தாவுவதற்குச் சந்தர்பம் இல்லையெனவும் கூறமுடியாது என்பதும் இந்நிறுவனத்தின் கருத்தாகும்.

எனவே, அவதானம் அவசியம் என்பது ஒரு முற்கூட்டிய அச்சுறுத்தலுக்குரிய அறிகுறியாகக் கவனத்தில் கொள்ள வேண்டியதாகவுள்ளது.