
posted 24th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ரமழான் வாழ்த்துச் செய்தி
புனித ரமழானின் அருட்பாக்கியத்தால் முஸ்லிம் சமூகம் விமோசனம் அடையட்டுமென சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ரமழானை வரவேற்று அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது.
அருள்மிக்க இம்மாதத்தை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உலக முஸ்லிம்களை கலிமாவின் பிணைப்பில் பக்குவப்படுத்த இப்புனித ரமழான் உதவட்டும். இறை அச்சமுள்ள இம்மாதத்தை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை அல்லாஹுத்தஆலா நமக்கு வழங்க வேண்டும்.
இம்மாதத்தில் இயன்றளவு நல்லமல்களில் ஈடுபட்டு, நமது ஆன்மீக வாழ்வின் ஈடேற்றத்துக்கு நாம், வழி தேடுவது அவசியம். பேதங்களைப் போக்கி, இறையுணர்வில் இணைய ஒரே உம்மத்தினராக ஒன்றுபடுவதற்கு புனித ரமழான் பயிற்சியளிக்கும். வல்ல நாயனின் திருப்திக்காக இம்மாதம் முழுவதும் நற்காரியங்களில் ஈடுபடுவோம். சுய ஆசைகளை ஒதுக்கி, பொது நலன்களை வெல்வதற்கு இம்மாதத்தைப் பயன்படுத்த வேண்டும். எல்லாக் கருமங்களும் இறைவனின் விதிக்கு உட்பட்டது என்ற நம்பிக்கையில் நமது வாழ்வு இருக்கட்டும். ஏழைகளுக்கு உதவி, பிறரின் பசியைப் போக்கி, பொறுமையுடன் நடந்து, இப்புனித ரமழானின் பாக்கியத்தைப் பெறுவதற்கு எல்லாம்வல்ல இறைவன் அருள்பாலிப்பானாக எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)