
posted 17th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மீள்குடியேற விடுவிக்கப்பட்ட காணிகள்
பலாலியில் கடந்த பெப்ரவரி 3ஆம் திகதி 108 ஏக்கர் காணிகள் மீள்குடியேற்ற வசதிகளை மேற்கொள்வதற்காக விடுவிக்கப்பட்டன. இங்கு, தற்காலிக முகாம்களில் வசித்துவரும் குடும்பங்களின் மீள் குடியேற்றத்துக்கு திட்ட முன்னெடுப்புக்களை யாழ். மாவட்ட செயலகம் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில், பலாலியில் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பார்வையிடும் முகமாகவும் தற்காலிக வீட்டுத் திட்டங்களை வழங்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கும் 'றகாமா' நிறுவனமும் நோர்வேயை தளமாகக் கொண்டு இயங்கும் போரூட் நிறுவனமும் இணைந்து நேற்று முன்தினம் களப்பயணம் மேற்கொண்டன.
இதன்போது தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவசிறி, றகாமா நிறுவன பணிப்பாளர் மரிக்கார், நோர்வே போரூட் அமைப்பின் திட்ட அமைப்பாளர் அனா, பலாலி கிராமசேவகர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)