
posted 24th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
புரையோடியுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் சாத்தியமாகாத பொருளாதார வளர்ச்சி
மனித உரிமை மீறல்களுக்கான நீதிக்கு பதில் கொடுக்கப்படாமல், உள்நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல், நாணய நிதியத்தின் கடன் உதவி மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது என்பது சாத்தியமானது இல்லை என வடக்கு மாகாணச் சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் ஒரு புதிய விடயம் அல்ல. காரணம், ஐெயவர்தன அரசாங்கத்தில் இருந்து பிறேமதாஸ, சந்திரிக்கா, மகிந்த றாஐபக்ஷ போன்ற ஐனாதிபதிகளின் காலத்திலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியானது கிடைத்தது. ஆனால், அவ் உதவி மூலம் நாடு வளர்வதற்குப் பதிலாக ஊழல் பெருச்சாளிகளே வளர்ந்தன.
ஆனால், இதுவரை கிடைத்த உதவியை விட பெருந் தொகையான உதவி பல கடிமான நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம் தான் இம்முறை கிடைக்கவுள்ளது. இந் நிபந்தனைகளின் பாதிப்பை பொது மக்கள் புரியாது பாராட்டுக்களும், வெடி அடிப்புக்களும் செய்வதனைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது.
ஆகவே, கிடைக்கும் கடன் உதவி ஊழல் வாதிகளை பாதுகாக்கவே பயன்பட போகிறது என்ற கசப்பான உண்மையை நாட்டு மக்கள் வெகு விரைவில் உணர்வார்கள் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)