
posted 20th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நீர்வேளாண்மைக்கு சாத்தியமான இடத் தெரிவு
வடக்கு மாகாணத்தில் நீர்வேளாண்மை உற்பத்திகளை சாத்தியமான இடங்களை அடையாளம் கண்டு விரைவுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய, நீர்வேளாண்மைக்கு பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தும் விசேட கள ஆய்வுகள் கடந்த சில நாட்களாக நாரா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த கள ஆய்வுகளை வெற்றிகரமாக இன்று நிறைவு செய்த நாரா குழுவினரை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களின் ஒத்துழைப்பிற்கான வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)