
posted 8th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
படுகொலை செய்யப்பட்ட யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்ணன் சிவநேசனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு வவுணதீவு நாவல்தோட்டம் மாரியம்மன் ஆலயத்தின் முன்னால் இடம்பெற்றது.
இதில் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாமனிதர் கிட்ணன் சிவநேசனின் உவுருவ படத்திற்கு மாவீரர் கங்காவின் தாயாரான தம்பி போடியார் அமராவதி ஈகச்சுடர் ஏற்றியதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் மலர் மாலை அணிவித்தார். நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அன்னாரது ஆத்மசாந்தி வேண்டி மலர் தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)