
posted 30th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தனுஷ்கோடிக்கு அகதிகளாகச் சென்ற இலங்கைத் தமிழர்கள்
இலங்கையிலிருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்த இலங்கை தமிழர்கள் 8 பேர், கடற்கரை கண்காணிப்பு பொலிஸாரின் விசாரணைக்குப் பின் மண்டபம் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் கடந்த ஆண்டு மார்ச் முதல் இதுவரை இலங்கை தமிழர்கள் 225 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கை கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தைச் சேர்ந்த சசிக்குமார் (47), அவரின் மனைவி உமாதேவி (42), இவர்களின் இரு மகள்கள், பார்வதி (70), மகேந்திரா (50) என்பவர் உட்பட 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் திங்கட்கிழமை (27) இரவு தலைமன்னாரில் பைபர் படகு மூலம் புறப்பட்டனர்.
தனுஷ்கோடி அருகே உள்ள மணல் தீடைப் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை வந்திறங்கினர்.
தகவலறிந்த கடலோர காவல் படை மணல் தீடையிலிருந்த இலங்கைத் தமிழர்கள் 8 பேரை படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்குக் கொண்டு வந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)