
posted 21st March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து கிராமத்தை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து கிராமத்தை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (21) கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மகா சக்தி பெண்கள் அமைப்பின் உருத்திரபுரம் கிழக்கு பெண்கள் குழுவின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று (21) இடம்பெற்றது.
பிரதேசத்தில் இடம்பெறும் திருட்டு முதலான குற்ற செயல்கள், தேவையற்ற கூடுகைகள், போதைப்பொருள் பயன்பாடு அகிய குற்றச் செயல்களிலிருந்து கிராமத்தை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்வாக குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
பிரதேசத்தின் அனைத்து வீதிகள் ஊடாகவும் குறித்த விழிப்புணர்வு பயணம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மத தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)