
posted 25th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
குருநகர் கடலில் 5 வருடங்களின் பின் திருப்பாடுகளின் சிலுவைப்பாதை தியானம்
யாழ்ப்பாணம் குருநகர் கடலில் 5வருடங்களின் பின் திருப்பாடுகளின் சிலுவைப்பாதை தியானம் நேற்று (24.03.2023) வெள்ளிக்கிழமை குருநகர் கடலில் நடபெற்றது.
குருநகர் பங்கிலே முதன்முதலில் அருட்பணி ம. இம்மானுவேல் பயஸ் அடிகளாரின் காலத்திலே (1973-1976) கடலில் மின்னொளியில் சிலுவைப்பாதை காட்சிப்படுத்தப்பட்டது.
இரண்டாவது தடவையாக 2018ஆம் ஆண்டில் குறித்த ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் பெரும் முயற்சியினால் அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி இ. இரவிச்சந்திரன் அடிகளாரின் ஆலோசனையில் ஆசிரியர் இக்னேஷியஸ் பிரபா அவர்களின் நெறிப்படுத்துதலில் 5 காட்சிகளுடன் கடல் சிலுவைப்பாதை தியானம் காட்சிப்படுத்தப்பட்டது.
மீண்டும் குருநகர் பங்கு திரு இருதய சபையினரால் பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளாரின் ஆலோசனையில் திருவாளர் ஜெகன் கரண்சன் அவர்களின் நெறிப்படுத்துதலில் 24/03/2023 வெள்ளிக்கிழமை மாலையில் கடல் சிலுவைப்பாதை தியானம் இடம்பெற்றது.
இத்தியானம் தொடர்மாடி கடற் பரப்பிலிருந்து ரேகடி புனித அந்தோணியார் சிற்றாலய கடற்பரப்பு வரை 7 திருப்பாடுகளின் காட்சி காட்சி படுத்தப்பட்டமை குறிப்பிட தக்கது.
இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இயேசுவின் பாடுகள் உயிரோட்டமாக காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)