
posted 30th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அகில இலங்கை சமாதான நீதவானாக அன்புராஜ் லெம்பேட்
மன்னார் வங்காலையைச் சேர்ந்த திரு அந்தோனி திதிமுஸ் அன்புராஜ் லெம்பேட் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம். மிஹால் அவர்களின் முன்னிலையில் புதன்கிழமை (29) அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமானம் செய்துக் கொண்டார்.
இவர், திரு .திருமதி அந்தோனி லெம்பேட் மெற்றிலம்மா குலாஸ் ஆகியோரின் புத்திரனும் ஆவார்.
இவர் வங்காலை சென். ஆன்ஸ் தேசிய பாடசாலையின் பழைய மாணவனும் , நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், தற்பொழுது இராஜாங்க அமைச்சரும், மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் காதர் மஸ்தான் அவர்களின் மன்னார் மாவட்ட இணைப்பாளரும் ஆவார்.
அத்துடன் பொதுப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வரும் ஒரு நபருமாவார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)