
posted 6th March 2022
அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்துக்கமைவாக “போதையற்ற நாடு - சௌபாக்கியமான தேசம்” எனும் மகுட வாசகத்துக்கேற்ப போதையற்ற தேகாரோக்கியமான உள மற்றும் சுகாதாரமான நீங்களே சிறந்த மனிதன் எனும் தொனிப்பொருளுக்கமைய பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைய நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுச் செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்புச் செயலமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி மட்டக்களப்பு மாவட்ட செயலக போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் ஏற்பாட்டில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வொன்று புனித மிக்கேல் கல்லூரியில் இடம்பெற்றது.
சாரண ஆசிரியரும், மட்டக்களப்பு மாவட்ட செயலகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மாவட்ட இணைப்பாளருமான பீ. டினேஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஏ. நவேஸ்வரன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிமனையின் உளநல வைத்திய நிபுணர் எஸ். அருள்ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House