
posted 6th March 2022
வியர்வை துளிகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பமானது.
“பெண்தொழிலாளர்களைப் பாதுகாத்திடுங்கள், சி190சமவாயத்தை ஏற்படுத்துங்கள்” எனும் தொணிப்பொருளில் இவ்வருட பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதன்போது குறித்த விடயத்தை வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட பெண்கள் கவனயீர்ப்பு ஊர்வலமாக பாரதி ஸ்ரார் தனியார் மண்டபம் வரை சென்றனர்.
தனியார் மண்டபத்தில் மண்டப நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில், நாடளாவிய ரீதியில் உள்ள பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House