விடுகை விழா

நிந்தவூர் Y Two K பாலர் பாடசாலையின் விளையாட்டு நிகழ்வு, பரிசளிப்பு நிகழ்வு மற்றும் வருடாந்த விடுகை விழா கமு/கமு/ அல்- பதுரியா வித்தியாலயத்தில் Y 2 K நலன்புரி அமைப்பின் தவிசாளரும், Y Two K பாலர் பாடசாலையின் முகாமையாளருமான ஏ.எச்.எம். லாபிர் (JP) தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ககட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் கெளரவ தவிசாளருமான எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் மாணவ மாணவிகளிக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் விஷேட அதிதிகளாக கமு/கமு/ அல்- பதுரியா வித்தியாலயத்தின் அதிபர் எம். அப்துல் றஹீம், நிந்தவூர் பிரதேச சபையின் கெளரவ உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எல். றியாஸ் ஆதம், நிந்தவூர் பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர் ஏ. அப்துல் வாஹிட், நிந்தவூர் பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர் எஸ்.எம். ஆதம்பாவா ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக ஓய்வு நிலை ஆசிரியர் எம்.ஏ. மசூர் (JP), தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.எச்.எம். நாளிர் (JP) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய தவிசாளர் அஸ்ரப் தாஹிர், ஒரு பிள்ளையுடைய கல்வியின் முதற்படியே பாலர் பாடசாலையாகும், இங்கிருந்துதான் அடுத்த கட்ட வாழ்க்கைக்கான முதல் அத்தியாயம் ஆரம்பிக்கின்றது. எனவே இங்கு சீரான ஆன்மிகக் கல்வி, உலகக்கல்வி மற்றும் இனைப்பாடவிதான செயற்பாடுகளும் இடம்பெற வேண்டும்.

நிந்தவூரில் காணப்படுகின்ற பாலர் பாடசாலைகள் நவீன வசதிகளுடன் கூடிய கட்டிட அமைப்பு மற்றும் கல்வி முறைமைக்கு மாற்றப்பட வேண்டுமெனவும் நவீன முறையிலான கற்பித்தல் முறைமையினூடாக மிகவும் இலகுவாக சிறார்களுக்கு கல்வியினை ஊட்ட முடியுமெனவும் தெரிவித்தார்.

அதற்கமைவாக நிந்தவூர் பிரதேச சபையின் பராமரிப்பின் கீழ் நவீன வசதிகளுடன் கூடிய முழுக்க முழுக்க இலவசாமான அல்- ஹிக்மா பாலர் பாடசாலை அன்மையில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விடுகை விழா

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House