
posted 9th March 2022

அல்-ஹாஜ் என்.எம். அமீன்
இலங்கையின் பிரதான ஊடகவியலாளர் அமைப்புகளுள் ஒன்றான சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25 ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் 12 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவிருக்கின்றது.
முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்-ஹாஜ் என்.எம். அமீன் தலைமையில் கொழும்பு – 10 ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, அல்-ஹிதாயா கல்லூரி கேட்போர் கூடத்தில் இந்த வருடாந்த மாநாடு நடைபெறும்.
வழமை போன்று இரு அமர்வுகளாக நடைபெறவுள்ள மாநாட்டின், முதல் அமர்வில், ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருப்பதுடன்,
கலாநிதி. எம்.ஸீ. ரஸ்மீன் “ஊடகமும் முஸ்லிம்களின் எதிர்காலமும்” எனும் தொனிப்பொருளில், நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்புரையும் நிகழ்த்துவார்.
மேலும், இரண்டாவது அமர்வில் யாப்புத்திருத்தம், புதிய உத்தியோகத்தர்கள் தெரிவு என்பன இடம்பெறவுள்ளதாக போரத்தின் பொதுச் செயலாளர் என்.ஏ.எம். ஸாதிக் ஷிஹான் அறிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House