வங்கியின் பொன்விழாவில் பயிர்கள் பகிர்ந்தளிப்பு

தேசிய சேமிப்பு வங்கியின் பொன்விழாவை முன்னீட்டு பொருளாதார ரீதியில் பெறுமதிமிக்க விவசாயப் பயிர்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித்திட்டம் நேற்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் இடம்பெற்றது.

பருத்தித்துறையில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை கிளையின் முகாமையாளர் அப்புத்துரை கெங்காதரன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட பயனிளிகளுக்கு சேதன பசளை, பழ மரக்கன்றுகள் மற்றும் மரக்கரி விதைகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டதுடன் கரவெட்டி கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் செ. திலீப்குமார், விவசாய போதனா ஆசிரியர்களான துஸ்யந்தி தனஞ்சயன், பு. நிரோஜன் ஆகியோர்களால் வீட்டுத்தோட்டம் மேற்கொள்ளல் மற்றும் சேதன பசளைகளை உற்பத்தி செய்தல் தொடர்பான கருத்துக்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வின் பிரதம விருந்தினராக தேசிய சேமிப்பு வங்கியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிரதான தகவல் அதிகாரி பொது முகாமையாளர் கலாநிதி. ஏ.கே.எல். இளேசிங்க கலந்துகொண்டிருந்தார்.

அத்தோடு தேசிய சேமிப்பு வங்கியின் வட பிராந்திய முகாமையாளர் நடராஜர் பகீரதன், கரவெட்டி கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாயப் போதனாசிரியர்கள், தேசிய சேமிப்பு வங்கியின் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பு பிரதிநிதிகள், சிதமு பெண்கள் கமக்கார அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வங்கியின் பொன்விழாவில் பயிர்கள் பகிர்ந்தளிப்பு

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House