முஸ்லிம்கள் மீது கொடூரமாக பிரயோகிக்கப்படுகிறது
முஸ்லிம்கள் மீது கொடூரமாக பிரயோகிக்கப்படுகிறது

சட்டத்தரணி ஆரிகா காரியப்பர்

அன்று தமிழர்கள் மீது பாய்ந்த பயங்கரவாத தடைச் சட்டம் இன்று முஸ்லிம்கள் மீது ஏவுகணை தாக்குதலுக்கு ஒப்பாக கொடூரமாக பிரயோகிக்கப்படுகிறது என்று கல்முனை மாநகர சபையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் தெரிவித்தார்.

மக்களின் உயிவாழ்கின்ற உரிமைக்கு எதிராக பிரயோகிக்கப்படுகின்ற இப்பயங்கரவாத தடைச் சட்டம் இனியும் நீடிப்பதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் சூளுரைத்தார்.

நேற்று திங்கட்கிழமை (28) பிற்பகல் இடம்பெற்ற கல்முனை மாநகர சபையின் 47ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கொண்டு வரப்பட்டிருந்த பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான ஹென்றி மகேந்திரன் குறித்த பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

உறுப்பினர் சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் மேலும் உரையாற்றுகையில்;

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டமானது 1979ஆம் ஆண்டு ஒரே நாளில் கொண்டு வரப்பட்டு, ஒரே நாளில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட சட்டமாக இருக்கிறது. ஆரம்பத்தில் தமிழர்களை இலக்கு வைத்து நடைமுறைப்படுத்தப்பட்ட இச்சட்டமானது பிற்பட்ட காலத்தில், குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது ஏவுகணைத் தாக்குதலுக்கு ஒப்பாக கொடூரமாக அமுல்படுத்தப்பட்டு வருவதைக் காண்கிறோம்.

இந்த சட்டத்தை பயன்படுத்தி எமது முஸ்லிம் சமூகத்திலுள்ள இளைஞர்கள் மட்டுமல்லாமல் மிக முக்கிய புத்திஜீவிகள் கூட அநியாயமாக கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பயங்கரவாத செயற்பாடுகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாத, தேசிய ரீதியில் பிரபலமான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், கவிஞர் அஹ்னப் ஜெஸீம் போன்றோர் நீண்ட காலமாக சிறைப்பிடிக்கப்பட்டு, சமீபத்தில்தான் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறே எவ்வித குற்றமும் இழைக்காத இன்னும் பலர் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாத தடைச்சட்டம் எனும் பாரிய ஆயுதத்தின் மூலம் இன்று முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகள், திறமைசாலிகள் எல்லாம் ஒடுக்கப்பட்டிருக்கின்றார்கள். சர்வதேச அழுத்தம் காரணமாக அண்மையில் இந்த சட்டத்தில் கொண்டு வரப்பட்டிருக்கின்ற திருத்தம் வெறும் கண்துடைப்பான ஒரு விடயமாகும். குறிப்பாக தடுப்புக்காவல் 18 மாதங்கள் என்பது 12 மாதங்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இச்சட்டத்தின் ஏனைய ஏற்பாடுகள் எல்லாம் அவ்வாறே இருக்கிறது.

ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி என்றே கருதப்படுகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்துச் சொல்லப்படுகின்ற சிலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதனை பல சந்தர்ப்பங்களில் சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாக கண்டித்திருக்கிறது. இவ்வாறான நிலைமையில் மக்களின் அடிப்படை உரிமையை மீறுகின்ற ஒரு சட்டமாகவே இந்த பயங்கரவாத தடை சட்டம் காணப்படுகிறது. மக்களின் உயிவாழ்கின்ற உரிமைக்கு எதிராக பிரயோகிக்கப்படுகின்ற இப்பயங்கரவாத தடைச் சட்டம் இனியும் நீடிப்பதை அனுமதிக்க முடியாது. அதனை உடனடியாக நீக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்- என்றார்.

இப்பிரேரணை மீது மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், உறுப்பினர்களான சந்திரசேகரம் இராஜன், ஏ.ஆர்.அமீர், ரொஷான் அக்தர் ஆகியோரும் கருத்துக்களை முன்வைத்து, பயங்கரவாத தடைச்சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். உறுப்பினர் எம்.எம்.நிஸார் பிரேரணை தொடர்பில் மாற்றுக் கருத்தை பதிவு செய்திருந்த அதேவேளை பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

முஸ்லிம்கள் மீது கொடூரமாக பிரயோகிக்கப்படுகிறது

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House