மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி மற்றும் ரோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று நேற்று வியாழக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் நல்லூர் செம்மணி வளைவுப் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் ஒன்றுகூடியவர்களால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்சாரத் தடை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நிலையில் மக்களின் பாதிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சுகிர்தன், சயந்தன், யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன், உள்ளூராட்சி சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House