மக்கள் மன்றம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க எதிர்வரும் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.

நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்துவரும் “சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற தீர்வு” எனும் தலைப்பிலான மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே அவரது வருகை அமையவிருக்கின்றது.

இதன்படி அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் அன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவிருக்கும் மக்கள் மன்றம் நிகழ்வில், அனுர குமார திசநாயக்க சிறப்புரை ஆற்றுவார்.

“சீரழிந்த தாயகத்தைக் கட்டியெழுப்புகின்ற தீர்வு” எனும் தலைப்பில் நாட்டின் இன்றைய ஆட்சியின் அவலநிலை, நாட்டு மக்களின் அவலங்கள், அரசியல் சூழ்நிலைகள் என்பன தொடர்பில் அவரது சிறப்புரை அமையுமென எதிர்பார்க்கப்படுவதுடன், பெருந்தொகையான தமிழ், முஸ்லிம் மக்கள் நிகழ்வில் கலந்து கொள்வரெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மக்கள் மன்றம்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House