
posted 6th March 2022
கொரொனாத் தொற்றும் மரணமும் அப்டேற்
இலங்கையில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 16, 321 ஆக அதிகரித்துள்ளது.
அதிகளவு போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்த இளைஞர்
போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய கட்டடத் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட அவர், இரவு உயிரிழந்தார். சடலம் யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடமிருந்து போதை மாத்திரைகளை இருவர் வாங்கியுள்ளனர்.
தண்ணீரில் நனைந்த போதை மாத்திரைகள் பல ஒன்றோடு ஒன்று ஒட்டியவாறு காணப்பட்டுள்ளன. அவற்றை ஒரேயடியாக உட்கொண்டதால் இவர் உயிரிழந்தார்.
இரண்டு போதை மாத்திரைகளை உட்கொண்ட மற்றையவரிடமும் விசாரணையின்போது வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House