
posted 20th March 2022
இ. போ. ச. பேருந்தும் - தனியார் பேருந்தும் போட்டி போட்டு ஓடியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணமானார். நால்வர் படுகாயமடைந்தனர். 20இற்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு வழித்தடத்தில் பயணிக்கும் தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான பேருந்தில் 40 இற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இதிலேயே பலர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த தனியார் பேருந்தும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் போட்டி போட்டு ஓடியமையமையே இந்த விபத்துக்குக் காரணம் என்றும், போட்டிபோட்டு ஓடிய இ. போ. ச. பேருந்து சடுதியாக வேகத்தை குறைத்தபோது விபத்தைத் தடுப்பதற்காக தனியார் பேருந்து வீதியோரமாக சென்றதாகவும் இதன்போது மரம் ஒன்றுடன் மோதி தடம்புரண்டதாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
விபத்தையடுத்து அங்கு கூடியவர்கள் பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House