
posted 22nd March 2022
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்க்கு உட்பட்ட வத்திராயன் கிராம சேவகர் பிரிவில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு குமார் வீரசூரியவின் நிதி பங்களிப்பில் இராணுவத்தால் வீடு ஒன்று அமைக்கப்பட்டு நேற்று திருமதி மதிரூபனிடம் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் டி.பி.எஸ். செனரத் யாப்பா மற்றும் நிதி பங்களிப்பாளர் ஆகியோரால் கையளிக்கப்பட்டது.
நேற்றுக் காலை 9:15. மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு. பிரபாகரமூர்த்தி, மருதங்கேணி போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் அமரசிங்க, வத்திராயன் கிராம சேவகர் மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அதிகாரிகள், 551 ஆவது படை பிரிவு தளபதி பிரிகேடியர் பிரசன்ன குணரத்தன, 553 படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் றொகான் ஜெகத்கொடி, சிவில் அதிகாரி விமல் சேகர உட்பட்ட அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House