பஸ் ஓட்டோவின் பின்னால் மோதியதால் இருவர் காயம்

கிளிநொச்சி நகரின் ஏ-9 வீதியில் விபத்து ஒன்று நேற்று திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணிகளுடன் பயணித்த அரச பஸ்ஸுடன், அதே திசையில் பயணித்த ஓட்டோ பின் பகுதியில் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பஸ் தரிப்பிடத்தில் தரிக்க முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் ஓட்டோ பலமாக சேதம் அடைந்துள்ளதுடன், அதில் பயணித்த இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகினர். சம்பவம் இடம்பெற்ற நேரம் அதிக போக்குவரத்து நெரிசல் அப்பகுதியில் காணப்பட்டது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பஸ் ஓட்டோவின் பின்னால் மோதியதால் இருவர் காயம்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House