பணிப்பாளர் ஆலோசனை

அரசாங்க வைத்தியசாலைகளின் அதியுச்ச பலனை பொதுமக்கள் பெற்றுக்கொள்வதன் மூலம் பொருளாதார இழப்பை தவிர்த்துகொள்ள கூடியதாக இருக்கும் என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஐ.எல்.எம். றிபாஸ் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது இது தொடர்பாக மேலும் தெரிவித்தவை வருமாறு,

நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்து உள்ளது. இதனால் பொது மக்களும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேர்ந்து உள்ளது.

பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. அன்றாட அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்குகூட பெரிதும் கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில் அரசாங்க வைத்தியசாலைகளின் அதியுச்ச பலனை பெற்றுக்கொள்ளுமாறு நாம் எமது மக்களை பெரிதும் ஊக்குவிக்கின்றோம். எமது வைத்தியசாலைகள், பிரதோச சுகாதார பணிமனைகள் போன்றவற்றில் அனைத்து வசதிகளும், வளங்களும் இருக்கின்றன.

மருந்துகளுக்கு தட்டுப்பாடு கிடையாது, மக்களுக்கு வேண்டிய சேவைகளை வழங்க எமது உத்தியோகத்தர்கள் எப்போதும் தயாராகவே உள்ளனர். நிறைவான சேவைகள் அங்கெல்லாம் கிடைக்க பெறுவதை உறுதிப்படுத்துவதில் நாம் முனைப்புடன் இருக்கின்றோம்
ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் எமது அலுவலகத்துக்கு நீங்கள் முறைப்பாடு செய்ய முடியும். இலகுவாக முறைப்பாடு செய்ய கூடிய பொறிமுறையையும் உருவாக்கி இருக்கின்றோம். உங்கள் முறைப்பாடுகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரசாங்க வைத்தியசாலைகளின் சேவைகளைநாடி வருகின்ற பொது மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் பொது மக்கள் பொருளாதார இழப்பு, செலவு ஆகியவற்றை தவிர்த்து, குறைத்தும் கொள்ளமுடியும் என்றார்.

பணிப்பாளர் ஆலோசனை

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House