
posted 31st March 2022

ஏ.எல். முகம்மட் முக்தார்
அட்டாளைச்சேனை மற்றும் தர்கா நகர் ஆகிய தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு வழமைபோல் நோன்பு கால விடுமுறையை வழங்குமாறு இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி கல்வி அமைச்சருக்கு அவசர மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல். முகம்மட் முக்தார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்;
அட்டாளைச்சேனை மற்றும் தர்கா நகர் ஆகிய தேசிய கல்விக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் நோன்பு காலத்தில் முஸ்லிம் மாணவர்களின் நலன் கருதி அக்கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த விடுமுறை இவ்வருடம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு கால விடுமுறை வழங்கப்படும் காலப்பகுதியில் இவ்விரு கல்விக் கல்லூரிகளுக்கும் நோன்பு விடுமுறை வழங்கப்படுவது வழமையாகும்.
ஆனால், இம்முறை அவ்வாறின்றி தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக ஏனைய கல்விக் கல்லூரிகள் மூடப்படும் தினமான ஏப்ரல் 08 ஆம் திகதி மூடப்பட்டு ஏப்ரல் 18 ஆம் திகதி திறக்கப்படும் என கல்விக் கல்லூரி ஆணையாளர் கடிதம் மூலம் இக்கல்லூரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதன்படி கடந்த 30 வருடங்களாக இக்கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நோன்பு கால விடுமுறை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. சிலவேளை இவை தேசிய கல்விக் கல்லூரி என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட பின்னர் தவறான புரிதலின் அடிப்படையில் இந்நிலைப்பாட்டை கல்வி அமைச்சு எடுத்திருக்கலாம். ஆனால் இக்கல்லூரிகள் தேசிய கல்விக் கல்லூரிகளாகயாக மாற்றப்பட்ட பின்னும் நோன்பு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.
உண்மையில் இவ்விடயத்தில் ஏதோ ஒரு அநீதி இடம்பெற்றுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது. ஏனெனில், தற்போது இக்கல்லூரிகளின் பீடாதிபதிகளாக முஸ்லிமல்லாதவர்கள் கடமையாற்றுவதால் நோன்பு கால விடுமுறையை இரத்து செய்யும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சருக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்திருப்பதுடன் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House