
posted 25th March 2022
தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் 38 ஆவது படைப் பிரிவின் சார்ஜன்ட் மற்றும் சிரேஷ்ட ஆணைபெறாத உத்தியோகத்தர்களுக்கான நியமனம் மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியால கேட்போர் கூடத்தில் தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கட்டளையிடும் அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஜி.டபிள்யூ.ஜி.எச். நிலந்த தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமாரும், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண மாணவர் சிப்பாய் படையணியின் பிரதிப் பணிப்பாளர் கேணல் எம். அனுரகுமார, ஏ.ஜி. அப்துல் ரஹ்மான், பவுண்டேசன் நிறுவன பிரதம நிறைவேற்று திகிரி டாக்டர் ஏ.ஜி.ஏ. ரஹ்மான் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் என். சந்திரகுமார், சென். ஜோசப் கல்லூரி அதிபர் எம். பற்றிக் மற்றும் புதுமுகத்ததுவாரம் புனி இக்னேசியஸ் வித்தியாலய அதிபர் திருமதி வசந்தி ஜெயந்திரராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சார்ஜன்களாக 35 பேரும், சிரேஷ்ட ஆணைபெறாத உத்தியோகத்தர்களாக 21 பேருமாக மொத்தமாக 51 பேர் நியமனம் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் கம்பெனி கமாண்டர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், பொறுப்பாசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர் சிப்பாய்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House