
posted 26th March 2022
பொருட்களின் விலையேற்றத்துக்கும் பொருளாதாரச் சீரழிவுக்கும் எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (26) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்,
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தமிழர் தேசத்தை அங்கீகரி
எமது இனத்தை அழிக்க பெற்ற ஆயுதங்களுக்கு தமிழர்கள் பொறுப்பாளிகளா
அன்று ஆயுதத்தால் அழித்தாய் இன்று பட்டினியால் அழிக்கிறாய்
தமிழர் தேசத்தை அங்கீகரித்தால் மட்டுமே புலம்பெயர் தமிழர்கள் முதலிடுவர்
போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.
இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House