
posted 11th March 2022
தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்களுக்கான தொழில்சந்தை நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
யாழ். மாவட்ட செயலகத்தின் மனிதவலு மேம்பாட்டு திணைக்களத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தத் தொழிற்சந்தை நிகழ்வு, யாழ். மாவட்ட செயலகத்தின் நிகழ்வு அரங்கில் நேற்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது.
உதவி அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு 2022ஆம் ஆண்டிற்கான முதலாவது தொழிற்சந்தை நிகழ்வாகும்.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், உதவி அரசாங்க அதிபர் ம. பிரதீபன் உள்ளிட்ட பிரமுகர்கள் மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர்.
யாழ். மாவட்டதில் உள்ள தொழில் வழங்குநர்களாக நிறுவனங்கள் சார்பில் பிரதிநிதிகளும், தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துள்ள யாழ். மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் என பலரும் இத்தொழிற்சந்தை நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House