
posted 25th March 2022
கல்முனை கல்வி வலயத்தில் உள்ள நற்பிட்டிமுனை சிவசக்தி மகாவித்தியாலயத்தில் பத்து வருட காலம் அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற அதிபர் சஞ்ஜீவி.சபாரெத்தினத்திற்கு சேவைநலன் பாராட்டு விழா ஒன்று நடாத்தப்பட்டது.
வித்தியாலய மண்டபத்தில் அதிபர் திருமதி. யோகேஸ்வரி. இராமநாதன் தலைமையில் இச் சேவை நலன் பாராட்டு விழா நடைபெற்றது. இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற அதிபர் சஞ்சீவி. சபாரெத்தினத்தின் சேவையினைப் பாராட்டும் கவிவாழ்த்து மடலினை அதிபர் திருமதி யோகேஸ்வரி. இராமநாதன் வழங்கினார்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) எஸ்.எல். ஏ. றஹீம் அதிபர் சபாரெத்தினத்திற்கு பொன்னாடை போர்த்தி கௌரவமளித்தார்.
கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர். திருமதி. வரணியா. சாந்தகுமார், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ச. சரவணமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சேவை நலன் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பிரதம அதிதி உட்பட அதிதிகள் அன்னாரின் சிறந்த சேவைகளுக்கு பாராட்டும் புகழாரமும் தெரிவித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House