சிங்களப் பயிற்சி நெறி
சிங்களப் பயிற்சி நெறி

கல்முனை நீதிமன்றங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த, இரண்டாம் மொழி சிங்களப் பயிற்சி நெறியின் திறன் வெளிப்படுத்தல் இறுதி நிகழ்வு கல்முனை மேல் நீதிமன்ற மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடநெறியின் ஒருங்கிணைப்பாளர் ஏ. உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜே. ரொட்ஸ்கி பிரதம அதிதியாகவும் கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எல். ஏ.றியால் கெளரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இவர்களுடன் கல்முனை நீதிமன்றத் தொகுதியிலுள்ள நீதிமன்றங்களின் பதிவாளர்கள் மற்றும் சிங்கள மொழிப் பாட வளவாளர்கள் விசேட அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பாட நெறியில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் பலவும் அரங்கேற்றப்பட்டதுடன், பாட நெறியை சிறப்பாக நடத்திய வளவாளர்கள், பயிலுனர்கள் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

அரச ஊழியர்களுக்கான 150 மணித்தியாலம் கொண்ட இரண்டாம் மொழி சிங்களப் பயிற்சி நெறியில் கல்முனை நீதிமன்றத் தொகுதியிலுள்ள 03 நீதிமன்றங்களிலும் கடமையாற்றும் சுமார் 70 உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிங்களப் பயிற்சி நெறி

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House