
posted 20th March 2022
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் காத்தான் ஓடை என்ற கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த ஒரு பைபர் படகு மட்டும் கரை ஒதுங்கியுள்ளது.தகவலறிந்த கோடியக்கரை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பாளர் ஸ்டெல்லா மேரி உத்தரவின்பேரில் ராமசுப்பிரமணியன், செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த படகு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த படகா? அல்லது கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட படகா ? இப் படகில் யாரும் வந்தனரா ? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கியூ பிராஞ்ச் போலீசார், கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House