
posted 5th March 2022
மட்டக்களப்பு “அ” கலையகம் மட்டக்களப்பு ஆரையம்பதியைச் சேர்ந்த பல்கலை கலைஞர் மூத்ததம்பி அருளம்பலத்துக்கு (ஆரையூர் அருள்) கலையருவிப்பட்டம் வழங்கிக் கௌரவப்படுத்தியுள்ளது.
“மட்டக்களப்பு மகிமை வடமோடிக்கூத்து பாகம்-1” அரங்கேற்றம் கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய முன்றலில் இடம்பெற்ற போதே அவருக்கு இக்கௌரவம் வழங்கப்பட்டது. அத்தோடு ஏட்டண்ணாவியார் ம. கேதீஸ்வரன், மத்தள அண்ணாவியார் தே. சுவேந்திரன் மற்றும் கூத்துக் கலைஞர் நா. பாஸ்கரன் ஆகியோரும் இதன் போது பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
இதுவரை பல்வேறு ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ள மூத்ததம்பி அருளம்பலம் பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியாகப் பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House