
posted 16th March 2022


எஸ். உதயரூபன்
“தரமான கல்வியினூடாக நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைவோம்” எனும் தொனிப் பொருளுக்கமைய இலங்கை ஆசிரியர் சங்கம் நடாத்தும் மட்டக்களப்பு மாவட்டப் பேராளர் மாநாடு எதிர்வரும் 26 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 9.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண இணைப்பாளருமான எஸ். உதயரூபன் தெரிவித்தார்.
இதன்போது தேசிய கல்விக் கொள்கையை வலுப்படுத்தி, ஆசிரியர்களினதும், மாணவர்களினதும் சுதந்திரமான கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமைந்துள்ள சவால்களுக்குத் தரமான கல்வியினூடாக நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்குதல், 6 மாதகாலத்தினுள் அமுல்படுத்துவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட அதிபர் மற்றும் ஆசிரியர்களது 11 அம்சக் கோரிக்கைகளை வென்றெடுத்தல், ஆசிரியர் சேவையின் கௌரவத்தை யும், வான்மை விருத்தியையும் உறுதி செய்யும் வகையில் கல்விக் கவுன்சிலொன்றை ஏற்படுத்தல் மற்றும் கிழக்கு மாகாணக் கல்வித் துறையில் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளுக்குப் புறம்பாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகரித்த வேலைப்பழுவையும், அவசியமற்ற அழுத்தங்களைத் திணிப்பதைத் தவிர்த்தல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
எனவே இதில் மாவட்டத்திலுள்ள சகல ஆசிரியர்களும் கலந்து கொண்டு பேராளர் மாநாடு வெற்றி பெற பங்களிப்பினை நல்மாறு அவர் மேலும் கேட்டுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House