55ஆவது தேசிய புத்தரிசி விழா

55ஆவது தேசிய புத்தரிசி விழாவிற்கான அரிசியினை வழங்குவதற்காக கமநல சேவை நிலையங்களில் இடம்பெறும் புத்தரிசி விழா நேற்று திங்கட்கிழமை வவுனியா கோவில்குளம் கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை புத்த பெருமானுக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா ஏப்ரல் 03ஆம் திகதி அக்ர சாஸ்ய ஜெயஸ்ரீ மகா போதியில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுக்காக மாவட்ட ரீதியாக புத்தரிசி வழங்குவதற்கான விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் சரத்சந்திர மற்றும் விவசாயத் திணைக்கள உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பின் முக்கியஸ்தர்கள், விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

55ஆவது தேசிய புத்தரிசி விழா

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House